இந்தியாவில் கேன்ஸ் திரைப்பட விழா - தீபிகா படுகோன் கூறிய தகவல்
இந்தியாவுக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் என நடிகை தீபிகா படுகோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
இந்தியாவுக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் என நடிகை தீபிகா படுகோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட 75வது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது வருகிற 28'ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்தி சினிமாவில் இருந்து கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, தமன்னா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த விழாவில் பேசிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கூறியதாவது, 'இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, இதை நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இந்தியா செல்லும் நிலை மாறி கேன்ஸ் திரைப்பட விழா இந்தியாவிற்கு வரும் நிலை கண்டிப்பாக உருவாகும்' என நம்பிக்கை தெரிவித்தார்.