Kathir News
Begin typing your search above and press return to search.

திரைப்பட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வா? பேச்சுவார்த்தை விரைவில் !

Cinema News.

திரைப்பட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வா? பேச்சுவார்த்தை விரைவில் !

Mohan RajBy : Mohan Raj

  |  16 Aug 2021 9:15 AM GMT

தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச தயாராகும் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்.





தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் முற்றி வந்த நிலையில் இதற்கு ஒரு முடிவு எட்ட வேண்டுமே என திரையுலகம் கவலை கொண்டது. காரணம் தயாரிப்பாளர்களும், திரைப்பட தொழிலாளர்களும் இணக்கமாக இயங்கும் வேளையில்தான் படப்பிடிப்பு மற்றும் அனைத்து விதமான திரையுலக வேலைகளும் நடைபெறும். இதனாலேயே இரு சங்கங்களும் இணக்கமாக செல்ல வேண்டும் என அனைத்து திரையுலகினரும் கவலை கொண்டனர்.





இந்த வேளையில் இரு சங்கங்களும் பேச்சு வார்த்தைக்கு தயாராகவுள்ளனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவறான புரிதல் இன்றி தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடை களைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்த தயார் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சி சார்பில் கடிதம் அனுப்ப உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு குறித்தும் பேச உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News