Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்று மாதம் கழித்து 'தி பேமிலி மேன்' தொடருக்காக சாவகாசமாக மன்னிப்பு கேட்ட சமந்தா!

Cinema News

மூன்று மாதம் கழித்து தி பேமிலி மேன் தொடருக்காக சாவகாசமாக மன்னிப்பு கேட்ட சமந்தா!

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2021 8:00 AM GMT

தி பேமிலி மேன் தொடருக்காக மூன்று மாதங்கள் கழித்து சமந்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.





இயக்குனர்கள் ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த 'தி பேமிலி மேன் 2' வெப் தொடர் கடந்த ஜுன் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்த தொடரில் இலங்கைத் தமிழர்களை பற்றியும், விடுதலைப்புலிகளை பற்றியும் தவறான தகவல்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் பெண் போராளியாக சமந்தா நடித்திருந்தார், அவரின் குணாதிசயங்களும், அணுகுமுறையும் இலங்கை தமிழ் பெண் போராளிகளை இழிவுபடுத்துவதாக அமைந்திருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் மன்னிப்பு ஏதும் கோரவில்லை.





இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "மக்களுக்கென இருக்கும் சொந்த கருத்துக்களை நான் மதிக்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, அப்படி நடந்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News