Kathir News
Begin typing your search above and press return to search.

சமீப காலமாக செய்வதறியாது புலம்பும் நடிகர் சித்தார்த் !

சமீப காலமாக செய்வதறியாது புலம்பும் நடிகர் சித்தார்த் !

Mohan RajBy : Mohan Raj

  |  9 Oct 2021 7:45 AM GMT

சமீபகாலமாக சமூக வலைதளம் மற்றும் மீடியாக்கள் மூலம் அதிக புலம்பும் நடிகராக சித்தார்த்த உருவெடுத்துள்ளார்.

நடிகர் சித்தார்த் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தனது கருத்தை கூறி வருபவர், அரசியல் கருத்துக்கள், சினிமா சம்மந்தமான ட்விட்'கள் என சமூக வலைதகங்களில் பரபரப்பாக இயங்குவார். இவர் நடிகை சமந்தாவுடன் காதலராக வலம் வருகிறார் என்று ஒரு காலத்தில் பேச்சுக்கள் நிலவி வந்தன, அதற்கேற்றாற்போல் சித்தார்த் மற்றும் சமந்தா ஜோடியாக ஊர் சுற்றி வந்தனர். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட சமந்தா அமர்ந்திருக்க சித்தார்த் உருகி பாடும் நிகழ்வுகள் நடந்தேறின. பின்னர் சமந்தா நடிகர் நாக சைதன்யா'வை திருமணம் செய்து கொண்டார் அதன் விளைவாக சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டை நாய்க்குதான் கிடைக்கும் என்றால் மாற்ற முடியுமா" என்பது போன்று பதிவிட்டிருந்தார்.





தற்பொழுது நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் பதிவு ஒன்றை வெளியிட்டார், "அதில் ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

சித்தார்த் வெளியிட்ட அந்தப் பதிவிற்கு பல கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "ஒவ்வொரு நாளும் நான் என் மனதில் தோன்றுவதை டுவீட் செய்கிறேன், தெருநாய்களைப் பற்றி நான் டுவீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல" என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.





மேலும் "தனது டுவீட்களை தேவையற்ற சர்ச்சைகளுக்குள் இழுத்து பெரியதாக ஆக்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார். என் வாழ்க்கையில் விரும்பாதவர்களை விட நான் என் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். எனவே ஊடகங்களின் வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை" என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார். இதுபோல் தான் என்ட கூறுகிறோம் என்பது தெளிவில்லாமல் கூறிவிட்டு பின்னர் விளக்கம் வேறு தரும் குழப்ப நிலையில் உள்ளார் நடிகர் சித்தார்த்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News