Kathir News
Begin typing your search above and press return to search.

போதை பொருள் வழக்கில் ஆஜரான நடிகை ரகுல் ப்ரீத் சிங் - தொடர்ந்து சிக்கும் தெலுங்கு திரையுலகம் !

Cinema News.

போதை பொருள் வழக்கில் ஆஜரான நடிகை ரகுல் ப்ரீத் சிங் - தொடர்ந்து சிக்கும் தெலுங்கு திரையுலகம் !

Mohan RajBy : Mohan Raj

  |  3 Sep 2021 7:45 AM GMT

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆஜரானார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.





தெலுங்கு சினிமா உலகில் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது பற்றிய பல துறைகளின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் நேற்று முன்தினம் விசாரணைக் குழுவினர் முன் ஆஜரானார். இந்த வழக்கில் 12 தெலுங்கு சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





இதனைதொடர்ந்து நேற்று பூரி ஜெகன்னாத் உடன் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் நடிகை சார்மி அமலாக்கப் பிரிவு முன் விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜரானார். இவரை தொடர்ந்து பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபட்டி செப்டம்பர் 6ம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News