Kathir News
Begin typing your search above and press return to search.

பொன்னியின் செல்வன் வெற்றிவிழாவில் உருகிய மணிரத்தினம் - என்ன கூறினார் தெரியுமா?

'என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்ததற்கு நன்றி' என பொன்னியின் செல்வன் பட வெற்றி விழாவில் மணிரத்தினம் உருக்கமாக பேசியுள்ளார்.

பொன்னியின் செல்வன் வெற்றிவிழாவில் உருகிய மணிரத்தினம் - என்ன கூறினார் தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  6 Nov 2022 1:19 PM GMT

'என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்ததற்கு நன்றி' என பொன்னியின் செல்வன் பட வெற்றி விழாவில் மணிரத்தினம் உருக்கமாக பேசியுள்ளார்.

சமீபத்தில் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்று புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

அந்த வெற்றி விழாவில் பேசிய பணத்தின் இயக்குனர் மணிரத்தினம் கூறியதாவது, 'எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை அமரர் கல்கி அவர்களுக்கு முதலில் நன்றி. இதனை படமாக உருவாக்க வேண்டும் என்பது எனது பேராசை, இதனை அனுமதித்து அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்து வெளியில் வந்து பார்க்கும் போது தான் எத்தனை பேர் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிந்தது. சில தருணங்களில் இதுவே எனக்கு பயத்தையும் கொடுத்தது, இப்படத்தின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் என் இதயத்தின் அடையாளத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News