Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்கார் விருது கிடைக்காதது வருத்தமா?-டைரக்டர் மணிரத்னம் பதில்

"இதுவரை உங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லையே? அது பற்றி உங்களுக்கு வருத்தமா?" என்று நிருபர் கேட்ட கேள்விக்கு டைரக்டர் மணிரத்னம் கூறிய பதில்.

ஆஸ்கார் விருது கிடைக்காதது வருத்தமா?-டைரக்டர் மணிரத்னம் பதில்

KarthigaBy : Karthiga

  |  19 April 2023 1:31 AM GMT

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தில் நடித்துள்ள கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா மற்றும் மணிரத்னம் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது மணிரத்னம் கூறும்போது, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும் கல்கி எழுதிய கதையில் மாற்றம் செய்யவில்லை . அனைத்தையும் காட்சிக்குள் கொண்டு வர முயன்றோம் என்றார். தொடர்ந்து மணிரத்னத்திடம் உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் ஆஸ்கார் விருதை வென்றுள்ளனர். தமிழ் இந்தியில் சிறந்த படங்களை எடுத்து இருக்கும் உங்களுக்கு ஆஸ்கார் போன்ற உயரிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய போது "எனக்கு விருது கிடைக்கவில்லை என்று எந்த வருத்தமும் இல்லை. எனக்கு அடுத்த படம் கிடைத்தால் போதும்" என்றார்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவீர்களா என்று கேட்டபோது "முதலில் உங்களுக்கு காட்டுகிறேன்" என்றார். கார்த்தி கூறும்போது, "பொன்னின் செல்வன் படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. இந்த படத்தை இதுவரை தியேட்டருக்கு வராதவர்கள் எல்லாம் வந்து பார்த்தனர் எனது காதல் காட்சிகள் பிரமாதமாக இருந்தன. இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்றார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News