Kathir News
Begin typing your search above and press return to search.

சொகுசுக் கப்பலில் போதை விருந்து! விசாரணை வளையத்தில் சிக்கிய ஷாருக்கான் மகன்!

சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்து ஒன்றில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சொகுசுக் கப்பலில் போதை விருந்து! விசாரணை வளையத்தில் சிக்கிய ஷாருக்கான் மகன்!

ThangaveluBy : Thangavelu

  |  3 Oct 2021 7:33 AM GMT

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பையில் இருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் போதை விருந்து நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. இந்த தகவலை தொடர்ந்து இதில் பல முக்கிய நடிகர்களின் மகன்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஹசிஷ், எம்.டி. கோகைன் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி போதை விருந்தில் கலந்து கொண்ட 8 பேரை பிடித்துள்ளனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனிடையே பிடிப்பட்ட 8 பேரிடம் மும்பையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Dhaka Tribune


Next Story
கதிர் தொகுப்பு
Trending News