Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை நயன்தாரா மீது பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார்!

நடிகை நயன்தாரா மீது பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார்!

நடிகை நயன்தாரா மீது பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Jan 2021 6:05 PM GMT

நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர்களுக்கு சமமாக சம்பளம் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நடிகர் ரஜினி, அஜித்குமார், விஜய்சேதுபதி, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் சினிமாத்துறை மிகவும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளங்களை பாதியாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா மீது பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார. அதாவது கொரோனா காலத்தில் நடிகர், நடிகைகள் சம்பளத்தையும், தயாரிப்பு செலவுகளையும் குறைக்க வேண்டும். ஆனால் நயன்தாரா மும்பையில் இருந்து மேக்கப் மற்றும் ஆடை நிபுணர்களையும் வரவழைக்கிறார்.

அவர்களுக்கு என்று தனி சம்பளம், மற்றும் விமான டிக்கெட், தங்குவதற்கு, சாப்பிடுவதற்கு செலவுகள் அதிகமாக ஆகிறது. இதற்காக தினமும் ரூ.1.5 லட்சம் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா காலத்தில் அவர் ஆடம்பரத்தை விடலாம் எனவும் சினிமாத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News