ஷங்கரின் RC 15 படப்பிடிப்பை அதிரடியாக நிறுத்திய பெண் அதிகாரி - ஏன் தெரியுமா?
ராம்சரண் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கம் படத்தின் படப்பிடிப்பை பெண் அதிகாரி நிறுத்தியது பரபரப்பாகியுள்ளது.
By : Mohan Raj
ராம்சரண் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கம் படத்தின் படப்பிடிப்பை பெண் அதிகாரி நிறுத்தியது பரபரப்பாகியுள்ளது.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் தற்பொழுது ஹைதராபாத்தில் உள்ள சருர் நகர் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்தப் பகுதியை நகராட்சி அதிகாரியான அக்குலா ஷிவானி என்பவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்காக தடை விதித்தத்துடன், பள்ளிக்கூடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் படப்பிடிப்பை நிறுத்தி மாணவர்களின் படிப்பு பாழாகும் விதமாக படப்பிடிப்பு நடத்தக் கூடாது என கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் பள்ளியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியையும் கடுமையாக விமர்சித்துள்ளார் இதனால் ஷங்கரின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.