Kathir News
Begin typing your search above and press return to search.

ஐஸ்வர்யாராய்க்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பிய அரசு - முறைகேடு நிலத்தை வைத்திருந்தாரா?

ஐஸ்வர்யா ராய் தமிழில் 1997 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகமானார். இவர் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யாராய்க்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பிய அரசு - முறைகேடு நிலத்தை வைத்திருந்தாரா?

Mohan RajBy : Mohan Raj

  |  21 Jan 2023 1:58 AM GMT

ஐஸ்வர்யா ராய் தமிழில் 1997 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகமானார். இவர் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பாலிவுடில் பிரபலமடைந்தார். பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அதில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இந்நிலையில் ஒரு ஹெக்டேர் நிலம் ஐஸ்வர்யா ராய் பெயரில் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் உள்ளது. நாசிக் மாவட்ட வருவாய் துறை ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த ஓராண்டாக இந்த நிலத்திற்கு நிலவரி செலுத்தாததாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 நாட்களுக்குள் நிலவரி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வருவாய்த்துறை நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு நிலவரி செலுத்தாதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News