Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை சித்ரா எப்படி இறந்தார்.. சீரியல் நடிகர்களிடம் போலீஸ் விசாரணை.!

நடிகை சித்ரா எப்படி இறந்தார்.. சீரியல் நடிகர்களிடம் போலீஸ் விசாரணை.!

நடிகை சித்ரா எப்படி இறந்தார்.. சீரியல் நடிகர்களிடம் போலீஸ் விசாரணை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2020 10:44 AM GMT

சின்னத்திரையில் கலக்கி வந்தவர் நடிகை சித்ரா. இவர் முதலில் தொலைக்காட்சிகளில் பணியாற்றினார். இதன் பின்னர் சின்னத்திரைக்கு காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் இவரது வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவரது கதாபாத்திரத்துக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று தனியார் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது திரைத்துரையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர் சமீபத்தில் ரிஜிஸ்டர் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இறக்கும் முன்னர் தனது கணவருடன் அறையில் தங்கியுள்ளார்.

பின்னர் கணவரை வெளியே அனுப்பிவிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனது மகள் சித்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார். கணவர்தான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று சக தோழியும் நடிகையும் குற்றம்சாட்டியுள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சித்ரா மரணம் தொடர்பாக கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும், சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சக நடிகர், நடிகைகளிடமும், உறவினர்களிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News