Kathir News
Begin typing your search above and press return to search.

மணிரத்னம் என்னை ஏன் தேர்வு செய்தார் என இதுவரை எனக்கு தெரியாது - ராஜராஜசோழன் கதாபாத்திரம் குறித்து ஜெயம் ரவி

'மணிரத்னம் ஏன் என்னை தேர்வு செய்தார் என இதுவரை எனக்கு தெரியவில்லை?'

மணிரத்னம் என்னை ஏன் தேர்வு செய்தார் என இதுவரை எனக்கு தெரியாது - ராஜராஜசோழன் கதாபாத்திரம் குறித்து ஜெயம் ரவி

Mohan RajBy : Mohan Raj

  |  8 Sep 2022 12:52 PM GMT

'மணிரத்னம் ஏன் என்னை தேர்வு செய்தார் என இதுவரை எனக்கு தெரியவில்லை?' என ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.






பொன்னின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். படம் செப்டம்பர் 30'ம் தேதி வெளி வருகிறது இந்நிலையில் அவர் ரசிகர்களை சந்தித்தார்.





அப்பொழுது அவர் நிருபர்களிடம் கூறியது, 'இப்படி ஒரு கேரக்டரில் அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பேன் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஏன் என்னை தேர்வு செய்தார் என இதுவரை எனக்கு தெரியவில்லை அருள்மொழி வர்மன் கேரக்டரை படித்திருந்தாலும் படத்தை பொருத்தவரையில் மணிரத்னம் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்திருக்கிறேன். நெகட்டிவ் கமெண்ட்கள் அதிகம் வருகிறது என கேள்விப்பட்டேன் இதனை நான் வரவேற்கிறேன் அது படம் நன்றாக வர வேண்டும் என அக்கறையில் கூறப்படுவது' என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News