'சிம்பு' படத்தை பற்றி பிக்பாஸ் 'ஆரி' வெளியிட்ட தகவல்!
'சிம்பு' படத்தை பற்றி பிக்பாஸ் 'ஆரி' வெளியிட்ட தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களில் இருந்து வெற்றி பெற்ற ஆரி. சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்பதாக டுவிட்டரில் பதிவு செய்திருப்பது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. சிம்பு நடிப்பில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகவுள்ள 'பத்து தல' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த போஸ்டரை அவரது டுவிட்டரில் பதிவு செய்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.

இந்த படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கிய 'நெடுஞ்சாலை' என்ற திரைப்படத்தில் ஆரி நடித்திருந்தார் என்பது அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆரி தனது டுவிட்டரில் நெடுஞ்சாலை இயக்குனர் கிருஷ்ணாவின் அடுத்த படமான பத்து தல படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் சிம்பு, கிருஷ்ணா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்களின் ஆட்டத்தை பார்க்க தான் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் வாழ்த்துக்கள் குறித்து டுவிட்டை சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Wishing my Nedunchalai creator the greatest success. Waiting for the @SilambarasanTR_ @nameis_krishna @Gautham_Karthik aatam https://t.co/5E1LrFfcjQ
— Aari Arjunan (@Aariarujunan) January 19, 2021