Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்யன் கானின் வழக்கில் வெளிவரும் பல உண்மைகள்!

போதைப்பொருள் வழக்கில் கைதான மகனுக்காக கெஞ்சிய ஷாருக்கான்.

ஆர்யன் கானின் வழக்கில் வெளிவரும் பல உண்மைகள்!

KarthigaBy : Karthiga

  |  21 May 2023 12:00 PM GMT

இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த 2021 ஆம் ஆண்டு போதைப் பொருள் வடகில் கைதாகி இருபது நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மகனை விடுவிக்க ஷாருக்கான் போதை பொருள் தடுப்பு அதிகாரியிடம் வாட்ஸ் அப்பில் கெஞ்சியை சர்ச்சை பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அந்த பதிவில்" நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். எனது மகனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை. சிறையில் அடைத்தால் எனது மகன் மனம் உடைந்து போகும். எனது குடும்பமும் நிலைகுலைந்து போகும். யாருடனும் என்னால் பேச முடியவில்லை. ஆர்யன் காணுடன் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்" என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவை அதிகாரி கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளார். இந்த நிலையில் ஆர்யன் கானை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு ஷாருக்கானை போதை பொருள் தடுப்பு அதிகாரி தரப்பில் அணுகியதாகவும் ரூபாய் 25 கோடியை லஞ்சமாக பெற்றுள்ளனர் என்றும் இன்னொரு சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News