Kathir News
Begin typing your search above and press return to search.

விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது என கமல் ட்வீட்!

விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது என கமல் ட்வீட்!

விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது என கமல் ட்வீட்!

Amritha JBy : Amritha J

  |  24 Feb 2021 10:29 AM GMT

நடிகர் கமலஹாசன் புத்தக கண்காட்சி சென்னையில் நடைபெறுவதை அடுத்து கமலஹாசன் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.அந்தவகையில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த புத்தக கண்காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள 44வது புத்தகக் கண்காட்சி வரும் 24ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்பதாகும்.

இந்த புத்தக கண்காட்சி பற்றி கமல்ஹாசன் ட்வீட்டரில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.அதில் சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News