Begin typing your search above and press return to search.
ராக்கி பாய் அட்டகாசத்துடன் வரும் கே.ஜி.எப் 3 - தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்
கே.ஜி.எப் 3 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

By :
கே.ஜி.எப் 3 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் முதல் இரண்டு பாகங்களும் மிகபெரிய வெற்றி பெற்றன. இதன் காரணமாகவே கே.ஜி.எஃப் திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது அது குறித்து படத்தில் தயாரிப்பாளர் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கே.ஜி.எப் 3 படத்திற்கான கதை, திரைக்கதையை இயக்குனர் பிரஷாந்த் நீல் ஏற்கனவே தயார் செய்து வைத்து விட்டார். அந்த கதையில் ராக்கி பாய் இளமைக்காலம் மற்றும் பிளாஷ் பேக் காட்சிகள் இடம்பெறும் என குறிப்பிட்டுளார். மேலும் தற்போது சாலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்தவுடன் கே.ஜி.எப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகளை துவங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story