Begin typing your search above and press return to search.
உதயநிதி சொன்ன மாதிரி நான் 'டான்' எல்லாம் கிடையாதுங்க - ஜாலி சிவகார்த்திகேயன்
நேற்று வெளியான 'டான்' திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
By : Mohan Raj
நேற்று வெளியான 'டான்' திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன் கூறியதாவது, 'உதயநிதி ஜாலியாக தான் என்னை 'டான்' என குறிப்பிட்டார் நான் சினிமா 'டான்' எல்லாம் கிடையாது நல்ல நடிகன் ஆனால் போதும்' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, 'நான் சிறுவயதில் அண்ணாமலை ரஜினி போல் பால்காரனாகி, தொழிலதிபர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். பின் அப்பாவை பார்த்து போலீசாக விரும்பினேன்! கல்லூரி காலத்தில் மீடியாவில் வரவும், பொறியாளராகவும், கம்பெனி மேனேஜர் ஆக வேண்டும் என விரும்பினேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி விருப்பம் உள்ளது' என்றார்.
Next Story