விஞ்ஞானி நம்பி நாராயணன் தமிழர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? - மாதவன்
நம்பி நாராயணன் தமிழர் என்பது யாருக்கும் தெரியாது என மாதவன் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
நம்பி நாராயணன் தமிழர் என்பது யாருக்கும் தெரியாது என மாதவன் தெரிவித்துள்ளார்.
மாதவன் தயாரித்து, நடித்து, இயக்கியுள்ள படம் 'ராக்கெட்ரி - நம்பி எபெக்ட்' இப்படத்தில் இஸ்ரோவின் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் படமாக எடுத்துள்ளார் தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் இயக்குனர் மாதவன் கூறியதாவது, 'விக்ரம்-வேதா படம் முடிந்ததும் இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கை நடத்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்கக் கூடிய எனது நண்பர் பரிந்துரைத்தார்! பாகிஸ்தான் ராணுவத்தின் தேசிய ரகசியத்தை பகிர்ந்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றம் அற்றவர் என நிரூபித்தார். அவர் நாகர்கோயிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது என்பதும் நாட்டின் முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்றும்' மாதவன் கூறினார்.