தலையில் காயமடைந்தும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மஞ்சு வாரியர்
நெற்றியில் தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும் அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார் நடிகை மஞ்சுவாரியர்.
By : Mohan Raj
நெற்றியில் தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும் அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார் நடிகை மஞ்சுவாரியர்.
மலையாள நடிகைகளின் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை மஞ்சுவாரியர் மிகவும் அர்ப்பணிப்புடன் நடிப்பவர், இவர் சமீபத்தில் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடித்த 'ஜாக் அண்ட் ஜில்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் மஞ்சுவாரியர் சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இதுகுறித்து மஞ்சுவாரியர் உடன் சக கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரேணு சௌந்தர் என்பவர் கூறும்போது, 'அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒரு நடிகையை பார்ப்பது ரொம்பவே அரிது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நெருங்கும் சமயத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது எதிர்பாராவிதமாக நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது பின்னர் தையல் போடும் அளவிற்கு அது விபரீதமானது. இருந்தாலும் தையல் போட்டு சிறிது ஓய்வு எடுத்து விட்டு அடுத்த நாளே வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அந்த உணர்வு அர்ப்பணிப்புதான் மஞ்சுவாரியர்' எனவும் புகழ்ந்து பேசியுள்ளார் ரேணு சவுந்தர்.