Kathir News
Begin typing your search above and press return to search.

பெரிய ஜாம்பவான்கள் போட்டி போட்டதை மணிரத்னம் சாதித்துள்ளார் - ஜெயம் ரவி

'இந்தப் படத்தை எடுக்க பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் போட்டியிட்ட பொழுது மணி சார் அதனை சாத்தியமாக்கி உள்ளார்'

பெரிய ஜாம்பவான்கள் போட்டி போட்டதை மணிரத்னம் சாதித்துள்ளார் - ஜெயம் ரவி

Mohan RajBy : Mohan Raj

  |  2 Aug 2022 11:48 AM GMT

'இந்தப் படத்தை எடுக்க பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் போட்டியிட்ட பொழுது மணி சார் அதனை சாத்தியமாக்கி உள்ளார்' என பொன்னியின் செல்வன் படம் பற்றி நடிகர் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.




அமரர் கல்கியின் வரலாற்று புதினமான 'பொன்னின் செல்வனை' இயக்குனர் மணிரத்னம் தற்பொழுது படமாக்கியுள்ளார். முதல் பாடல் வெளியீட்டு விழா நடந்தது அதில் பேசிய ஜெயம் ரவி கூறியதாவது, 'நான், கார்த்திக். ஜெயராம் சார், விக்ரம் பிரபு, விக்ரம் சார், சரத் சார் இவர்கள் எல்லோரும் திரையில் தெரிபவர்கள் இப்பொழுது திரைக்குப் பின்னால் இருக்கும் ஹீரோக்களை பற்றி பேசுகிறேன்.




முதலில் மனிரத்னம் சார் படைப்பின் ஹீரோவும், நம் அனைவருடைய ஹீரோவும் அவர்தான் இந்த படத்தை பலர் எடுப்பதற்காக ஆசைப்பட்டார்கள். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் போட்டி போட்டு அவர்கள் கூட இந்த படத்தை எடுக்க நினைத்தார்கள் ஆனால் முடியவில்லை! இப்பொழுது அதனை மணி சார் மட்டுமே சாத்தியமாக்கி உள்ளார். இந்த படம் எனக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத் தந்துள்ள சொல்லப்போனால் இங்கு அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைந்துள்ளது' என ஜெயம் ரவி பேசியது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News