Kathir News
Begin typing your search above and press return to search.

மணிரத்னம் மீது 'பீட்டா' காவல்நிலையத்தில் புகார் !

Cinema News.

மணிரத்னம் மீது பீட்டா காவல்நிலையத்தில் புகார் !

Mohan RajBy : Mohan Raj

  |  3 Sep 2021 7:30 AM GMT

இயக்குனர் மணிரத்னம் மீது விலங்குகள் நல வாரிய அமைப்பாட பீட்டா வழக்கு தொடுத்துள்ளது.





இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படம் 'பொன்னியின் செல்வன்', அமரர் கல்கியின் வரலாற்று புதினத்தை படமாக்கும் முயற்சியில் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இதில் போர்க்கள காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட குதிரை ஆகஸ்ட் 11ம் தேதியன்று நடைபெற்ற படப்பிடிப்பில் இறந்ததாக ஆகஸ்ட் 18ம் தேதியன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெலங்கானா மாநில விலங்குகள் நலவாரியம், ஐதராபாத் மாவட்ட கலெக்டர் ஆகியோர் விசாரிக்க வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியமும் உத்தரவிட்டுள்ளது. இந்த கொடுமையை மணிரத்னம் நிறுத்திவிட்டு கிராபிக்சை பயன்படுத்த வேண்டும், என்றும் பீட்டா இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.





இயக்குனர் மணிரத்னத்திற்கு எதிராக பீட்டா இந்தியா அளித்துள்ள புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News