Kathir News
Begin typing your search above and press return to search.

அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மீரா மிதுன் !

சமூக வலைதளங்களில் அவ்வப்போது அவதூறுகளை பரப்பியதாக நடிகை மீரா மிதுன், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜரப்படுத்த உள்ளனர்.

அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மீரா மிதுன் !

ThangaveluBy : Thangavelu

  |  26 Aug 2021 5:05 AM GMT

சமூக வலைதளங்களில் அவ்வப்போது அவதூறுகளை பரப்பியதாக நடிகை மீரா மிதுன், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜரப்படுத்த உள்ளனர்.

பட்டியலின சமூகம் பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பேசி மீரா மிதுன் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் வந்ததை தொடர்ந்து கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், நடிகை மீரா மிதுன் சமூக வலைதளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த வழக்கில் அவரை கைது செய்துள்ளனர். இதற்கான வாரண்டை சிறையில் கொடுத்துள்ளனர்.

Source, Image Courtesy: News 7

https://news7tamil.live/meera-mithun-to-appear-in-court-today.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News