Kathir News
Begin typing your search above and press return to search.

"யாரிடம் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன்" - நயன்தாரா !

Cinema News

யாரிடம் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன் - நயன்தாரா !

Mohan RajBy : Mohan Raj

  |  16 Aug 2021 9:18 AM GMT

"யாரிடமும் சொல்லிவிட்டு திருமணம் செய்யமாட்டேன்" என முன்னணி நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.





கடந்த சில வருடங்களாக நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது முதல் சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படம் வரை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தமிழ் திரையுலகில் பிரபலம். இந்நிலையில் தனது திருமணம் பற்றி மனம் திறந்துள்ளார் நயன்தாரா.





நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்த நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி நேற்று டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா திருமணம் பற்றி கூறியதாவது, "நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அறிவிப்பேன். ஆனால், அனைவருக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன். இதற்கு மேல் எதையும் கேட்க வேண்டாம்" என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News