Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் முதல் திரைப்படம் என்ற பெருமையை தட்டிச்சென்ற 'பொன்னியின் செல்வன்' - எதில் தெரியுமா?

தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் தட்டிச் சென்றுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் திரைப்படம் என்ற பெருமையை தட்டிச்சென்ற பொன்னியின் செல்வன் - எதில் தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  18 Oct 2022 2:24 PM GMT

தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் தட்டிச் சென்றுள்ளது.




கடந்த செப்டம்பர் 30ம் தேதி என்று வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலின் கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் ரசிகர்கள் திரையரங்கில் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.




உலகம் முழுவதும் இதுவரை சுமார் 460 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த தமிழ் படமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' தட்டிச் சென்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News