Kathir News
Begin typing your search above and press return to search.

"நான் கிளம்புகிறேன் " -அருள்மொழி வர்மன் | "இளவரசே வேண்டாம்" - வந்தியத்தேவன்

Ponniyin Selvan.

நான் கிளம்புகிறேன்  -அருள்மொழி வர்மன் |  இளவரசே வேண்டாம் - வந்தியத்தேவன்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2021 2:15 AM GMT

பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மராக நடித்த ஜெயம் ரவி தனது பகுதிகளை முடித்துவிட்டு படக்குழுவில் இருந்து விடைபெற்றுள்ளார்.





பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றம் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை முடித்துக்கொடுத்துள்ளார் ராஜராஜ சோழனாக நடித்துள்ள ஜெயம்ரவி. படம் கிட்டதட்ட 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.





இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் ஜெயம் ரவி கூறியதாவது, "என்னை நம்பியதற்கு நன்றி. இனி பொன்னியின் செல்வன் செட்டில் இருப்பதை இழப்பேன். உங்களுடன் மீண்டும் வேலை செய்யும் நாளை எதிர்நோக்குகிறேன். புதிய தொடக்கத்திற்காக கனமான இதயத்துடன் செல்கிறேன்" எனக்கூறியுள்ளார்.





இதற்கு பதிலாக படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி கூறியுள்ளதாவது, "இளவரசே வேண்டாம், நாம் சோழநாட்டில் முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது" என்பது போல் பதிலளித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News