பாடகர் கே.கே மரணத்திற்கு காரணம் என்ன? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
பாடகர் கே.கே மரணத்திற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் வேளையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
By : Mohan Raj
பாடகர் கே.கே மரணத்திற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் வேளையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பின்னணி பாடகர் கே.கே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் கல்லூரியில் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது மரணம் அடைந்தார், இந்த நிலையில் இவரது மறைவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
குறிப்பாக அரங்கத்தில் நிரம்பி வழிந்த கூட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கே.கே இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் மொத்தமாக மூவாயிரம் பார்வையாளர்கள் மட்டும் தான் இருக்க முடியும் ஆனால் அவரது நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது அதன் காரணமாக அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவி உள்ளது. இதனால் கே.கே அசவுகரியம் ஏற்பட்டதாகவும் ஏசியும் அங்கு வேலை செய்யாத காரணத்தினால் அவருக்கு மூச்சு பிரச்சினை ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.