டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட உருக்கமான அறிக்கை
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார்.
By : Mohan Raj
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார்.
இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, 'எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நிலையில் அவரை தனியார் மருத்துவமனை சேர்த்து பரிசோதனை செய்ததில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளதாகவும் அதற்கு உயரிய சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தற்போது வெளிநாடு அழைத்துச் செல்கிறோம். விரைவில் சிகிச்சை முடிந்து வருகிறோம், அனைவர் அன்புக்கும் நன்றி' எனவும் குறிப்பிட்டுள்ளார்.