பழைய துணிமணிகளை ரன்வீருக்கு அனுப்பும் போராட்டம் - யார் செய்தது தெரியுமா?
நிர்வாண புகைப்படம் வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடை வழங்கி போராட்டம் நடத்தியுள்ளது தொண்டு நிறுவனம் ஒன்று.
![பழைய துணிமணிகளை ரன்வீருக்கு அனுப்பும் போராட்டம் - யார் செய்தது தெரியுமா? பழைய துணிமணிகளை ரன்வீருக்கு அனுப்பும் போராட்டம் - யார் செய்தது தெரியுமா?](https://kathir.news/h-upload/2022/07/29/1396873-whatsapp-image-2022-07-29-at-62918-pm.webp)
நிர்வாண புகைப்படம் வெளியிட்ட நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடை வழங்கி போராட்டம் நடத்தியுள்ளது தொண்டு நிறுவனம் ஒன்று.
ஹிந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ரன்வீர் சிங், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
இந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மும்பை போலீசார் இதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் இந்தூரில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதில் ஒரு பெட்டியில் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் வழங்கும் விதமாக பழைய பேண்ட், சட்டை, பனியன், டீசர்ட் போன்ற துணியை கொண்டு வந்து வைத்து அதனை ரன்வீர் சிங்'கிற்கு வழங்க இருப்பதாக தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.