Kathir News
Begin typing your search above and press return to search.

ஓ.டி.டி தளங்கள் மீது பதிந்த மத்திய அரசின் பார்வை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய முக்கிய தகவல்

ஓ.டி.டி தளங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஓ.டி.டி தளங்கள் மீது பதிந்த மத்திய அரசின் பார்வை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய முக்கிய தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2022 2:39 AM GMT

ஓ.டி.டி தளங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, 'தகவல் தொடர்பு ஒ.டி.டி தளத்தை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம். எளிய முறையில் ஒ.டி.டி தளத்தை ஒழுங்குபடுத்தப்படும். இதன் நோக்கமே பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான்.

இன்றைக்கு ஒ.டி.டி தளத்தை பயன்படுத்தி தான் பெரும்பாலான மோசடிகள் அரங்கேறுகின்றன வங்கிக் கணக்கில் தனது சொத்தாக வெறும் முப்பதாயிரம் வைத்திருக்கும் ஒரு ஏழை தவறுதலாக ஓ.டி.பி இலக்கங்கங்களை பகிர்வதால் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகையால் சிக்கல் நிறைந்த இந்த இணைய உலகை பாதுகாப்பு காரணங்களுக்காக உறுதிப்படுத்துவது இன்றியமையாதது. எனவே ஒ.டி.டி தளம் முறையாக ஒழுங்கு படுத்தப்படும்' என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News