Kathir News
Begin typing your search above and press return to search.

"வைகைப்புயலான எனக்கு பெரிய சூறாவளிப்புயலே வாழ்க்கையில் அடித்துவிட்டது" - வடிவேலு உருக்கம் !

Cinema News.

வைகைப்புயலான எனக்கு பெரிய சூறாவளிப்புயலே வாழ்க்கையில் அடித்துவிட்டது - வடிவேலு உருக்கம் !

Mohan RajBy : Mohan Raj

  |  11 Sep 2021 7:45 AM GMT

"வைகைப்புயலான எனக்கு பெரிய சூறாவளிப்புயலே வாழ்க்கையில் அடித்துவிட்டது" என நகைச்சுவை நடிகர் வடிவேலு மனம் திறந்துள்ளார்.





இயக்குனர் சுராஜ் உருவாக்கிய, நாய் சேகர் கதையில், வடிவேலு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சுராஜ் மற்றும் வடிவேலு ஆகியோர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்தனர். அப்போது வடிவேலு பேசியதாவது, "இந்த மாதிரி துன்பத்தை வேறு யாருமே அனுபவிக்க முடியாது. வைகைப்புயலாகிய என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலே அடித்து விட்டது. துாக்கமே வராத நோயாளி ஒருவர் மருத்துவரை அணுகிய போது, அவர், அருகே நடக்கும் சர்க்கஸ் சென்று பப்பூன் செய்யும் காமெடியை பார்த்தால் மனப்பாரம் இறங்கி நன்றாக துாக்கம் வரும் என்றாராம். ஆனால் அந்த நோயாளியோ, அந்த பப்பூனே நான் தான் என்பாராம். அந்த நிலையில் தான் நான் இருந்தேன்.





என்னை முடக்க நினைத்தவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், எனக்கு எண்டே கிடையாது. 10 ஆண்டில் ஆறு படம் நடித்தேன். இடைபட்ட காலத்தில், கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வெடியாக இருந்தது. என் மீது கூறப்பட்ட அனைத்து புகார்களும் பொய். எனக்கு ரெட் கார்டு போட்டதாக சொன்னதும் பொய்யே. இனி ஷங்கர் ஏரியா பக்கமே போகமாட்டேன். அந்த சகவாசமே வேண்டாம். இனி வரலாற்று சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன். அரசியலை விட மக்கள் விருப்பப்படி, திரையில் நடிப்போம் என வந்து விட்டேன். எதிர்காலத்தில் அரசியலில் வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை" என பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News