Kathir News
Begin typing your search above and press return to search.

என்னா ஒரு பிரமாண்டம் - ஜிகர்தண்டா 2 குறித்து வியந்த எஸ்.ஜே.சூர்யா

ஜிகர்தண்டா 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படம்.

என்னா ஒரு பிரமாண்டம் - ஜிகர்தண்டா 2 குறித்து வியந்த எஸ்.ஜே.சூர்யா

Mohan RajBy : Mohan Raj

  |  19 Jan 2023 2:00 PM GMT

ஜிகர்தண்டா 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படம். இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் எஸ்.ஜே .சூர்யா வில்லனாகவும் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்திற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது மற்றும் 36 நாட்களில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு நிமிஷம் நாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படம் குறித்து என்ன ஒரு கான்செப்ட், என்ன ஒரு செட், என்ன ஒரு போட்டோகிராபி, என்ன ஒரு பிரம்மாண்டம், என்ன ஒரு தயாரிப்பு வேல்யூ, அனைவருக்கும் நன்றி என ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு நான் பார்த்த அற்புத உள்ளம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News