Kathir News
Begin typing your search above and press return to search.

பெரிய மனதுடன் ரிஷப் ஷெட்டி செய்த காரியம்!

மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது காந்தாரா திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியானது.

பெரிய மனதுடன் ரிஷப் ஷெட்டி செய்த காரியம்!

Mohan RajBy : Mohan Raj

  |  11 Jan 2023 10:40 AM GMT

மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது காந்தாரா திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியானது. இது கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்லும் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. மேலும் இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. காந்தார படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி இந்த படத்திற்கு முன்பு இருந்ததை விட இந்திய அளவில் தெரிந்த மிகப்பெரிய நடிகராகிவிட்டார்.




தற்போது ஹாஸ்டல் குடுகாடு பெகாகிட்டரே என்ற படம் கன்னடத்தில் உருவாக்கி வருகிறது. இந்த படத்திற்கு ஒரு கெஸ்ட் ரோலில் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார். இவருடன் கன்னட சினிமாவின் பிரபல இயக்குனரான பவன் குமார் மற்றும் நடிகரான ஷைன் ஷெட்டி ஆகியோரும் இணைந்து ஒரே காட்சியில் வரும் விதமாக நடித்துள்ளனர். இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் முன்னாள் நண்பர்கள் சந்திப்பு குறித்த நிகழ்ச்சியில் இவர்கள் மூவரும் கலந்துகொள்ளும் காட்சியில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




லூசியா உள்ளிட்ட படங்களின் இயக்குனர் பவன் குமார் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராக இந்த படத்தை இயக்கி வரும் நிதின் கிருஷ்ணமூர்த்தி பணியாற்றியவர். இவர்களது வருகை இந்த படத்திற்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது. இரண்டு மாபெரும் இயக்குனர்களுடன் பணியாற்றி விட்டு தற்போது அவர்களே என்னுடைய படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டது மிகப்பெரிய சந்தோசம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் நிதின் கிருஷ்ணமூர்த்தி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News