Kathir News
Begin typing your search above and press return to search.

தளர்வுகளைத் தொடர்ந்து இந்தியாவில் எரிபொருள் தேவை உயர்வு!

தளர்வுகளைத் தொடர்ந்து இந்தியாவில் எரிபொருள் தேவை உயர்வு!

JananiBy : Janani

  |  10 July 2021 10:19 AM GMT

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்ந்து வரும் நிலையில் மே மாதம் வரை கடந்த ஒன்பது மாதமாகச் சரிவில் இருந்த இந்தியாவின் எரிபொருள் தேவை மீண்டும் ஜூன் மாதம் அதிகரித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எண்ணெய் தேவைக்கான பினாமி எரிபொருள் மே மாதத்தில் இருந்ததை விட 8 சதவீதம் அதிகரித்து 16.34 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாய்வு அமைச்சகத்தின் தகவல் அறிக்கை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பொருளாதார இயக்கத்தை மந்தப்படுத்தியது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை எரிபொருள் பயன்பாடு மிகக் குறைந்த அளவிற்குத் தள்ளியது. இருப்பினும் மே மாதத்தில் உச்சத்தில் இருந்த தொற்றுநோய் குறையத் தொடங்கியது, இதனால் கடந்த மாதம் எரிபொருள் தேவை ஆண்டுக்கு 1.5 சதவீதம் அதிகரிக்கத் துவங்கியது.

இருப்பினும் புதிய கொரோனா வைரஸ் வகை இந்த மீட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று சைமன் எலியாசென் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார். புதிய டெல்டா பிளஸ் மாறுபாடும் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான கவலையை மேலும் தூண்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.


இந்தியாவின் எரிபொருள் விற்பனையில் 40 சதவீதம் பங்குவகிக்கும் டீசல் நுகர்வு ஆண்டுக்கு 1.6 சதவீதம் குறைந்து 6.20 மில்லியன் டன்னாக இருந்தது, இது மே மாதத்தில் 12 சதவீதம் உயர்ந்தது. பெட்ரோல் விற்பனையும் மே மாதத்தில் 21 சதவீதம் அதிகரித்து 2.41 மில்லியன் டன்னாக இருந்தது.

Source: டைம்ஸ் நவ்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News