Kathir News
Begin typing your search above and press return to search.

2029ல் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்: SBI அறிக்கை!

2029 இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை.

2029ல் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்: SBI அறிக்கை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Sep 2022 12:19 AM GMT

2029-ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதாரம் என்ற அடையாளத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) சனிக்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் GDP வளர்ச்சி 13.5% ஆக இருந்தது. இந்த விகிதத்தில், நடப்பு நிதியாண்டில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்று SBI குழுவின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் அறிக்கை தெரிவித்துள்ளது. FY23க்கான இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் தற்போது 6.7% முதல் 7.7% வரை உள்ளது.


2014 முதல் இந்தியா ஒரு பெரிய கட்டமைப்பு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இப்போது 5 வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளை இந்தியாவை மிஞ்சும் என்று அறிக்கை கூறியது. 2027 ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியில் இந்தியா முன்பே செல்லும் என்றும் 2029க்குள் ஜப்பான் நாட்டை இந்தியா வந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது எனவே 2029 ஆண்டிற்குள் மூன்றாவது பெரிய பொருளாதரமாக இந்தியா வலுப்பெறும்.


2021 டிசம்பரில் இந்தியா இங்கிலாந்தை விஞ்சி 5வது பெரிய பொருளாதாரமாக இருந்ததாக அறிக்கை கூறியது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 2014 இல் 2.6% இல் இருந்து, இப்போது 3.5% ஆக உள்ளது. மேலும் 2027 இல் 4% ஐ கடக்க வாய்ப்புள்ளது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜெர்மனியின் தற்போதைய பங்காகும். புதிய முதலீட்டு நோக்கங்களில் சீனா மந்தமடைந்து வருவதால் இந்தியா பயனடைய வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

Input & Image courtesy: Times of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News