Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை தன்னம்பிக்கை நாடாக வளர உதவும் ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டம்.!

இந்தியாவை தன்னம்பிக்கை நிறைந்த நாடுகளில் ஒன்றாக வளருவதற்கு ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவை தன்னம்பிக்கை நாடாக வளர உதவும் ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டம்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Sep 2021 12:46 PM GMT

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பிறகு பெரிய மாற்றங்களைச் சந்தித்தது. குறிப்பாக இந்தியாவும் தன்னுடைய இரண்டாவது அலையின் போது, பல்வேறு மாற்றங்களை எதிர் கொண்டது. அதிலும் குறிப்பாக பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று நிதித்துறை. இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு உதவ மத்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் அபியனை அறிமுகப்படுத்தியது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்கு ஆத்மநிர்பார் பாரத் அபியான் மே மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நான்கு பகுதிகளாக அறிவித்தார். இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பங்கு வகித்தது.


ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் பொருளாதார நிவாரண தொகுப்புகளாக ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) நிவாரண தொகுப்பும் அடங்கும். இத்தகைய திட்டத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு சிரமங்களை சமாளிக்க ஏழைகளுக்கு உதவும் நோக்கமாக கொண்டுள்ளது. சிறப்பு ஆத்மநிர்பார் திட்டத்தின் முக்கியமான நோக்கம், தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின், பொருளாதார தொகுப்பின் கவனம் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளில் இருந்து ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும்.



அதோடுகூட வரி செலுத்தும் நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போன்ற ஒவ்வொரு துறையையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மேலும், இந்தத் திட்டத்தைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறுகையில், உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்த உறுதிமொழி எடுக்குமாறு ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டம் இந்தியாவை ஒரு தன்னம்பிக்கை நாடாக வளர வேண்டும் என்ற பார்வை கொண்டுள்ளது. குடிமக்கள் ஒன்றிணைந்து உள்ளூர் வணிகங்களை ஊக்குவிப்பது வழிவகுக்கும்.. நாட்டையும் அதன் குடிமக்களையும் எல்லா வகையிலும் தன்னிறைவு பெறும் நோக்கத்துடன், அரசாங்கம் ஆத்மநிர்பர் பாரத் அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Input & Image courtesy:Twitter post


Next Story
கதிர் தொகுப்பு
Trending News