Kathir News
Begin typing your search above and press return to search.

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் - வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

10 ஆண்டுகளில் முதலீடு செய்த தொகையை அப்படியே இரட்டிப்பாக பெற்றுக்கொள்ளும்படியான தபால் அலுவலகத்தின் புதிய திட்டம் குறித்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் - வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

KarthigaBy : Karthiga

  |  1 Aug 2023 2:20 AM GMT

கூடுதல் பாதுகாப்பு மற்றும் அதிக வட்டி விகிதம் ஆகிய காரணத்தினால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அஞ்சலகத் திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கிசான் விகாஸ் பத்ரா திட்டம் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு லாபத்தை வழங்கி வருகிறது. அதாவது, இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளருக்கு 7.5சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.


குறைந்தபட்சமாக ரூபாய்1000 முதல் அதிகபட்சமாக விருப்பப்பட்ட தொகையை இந்த திட்டத்தில் சேமிக்க இயலும். மேலும், முத்தலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டிப்பு லாபத்துடன் முதலீடு செய்த தொகையை பெற்றுக் கொள்ள இயலும்.


அதாவது முதலீட்டாளர்கள் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ஒன்பது ஆண்டுகள் 7 மாதங்கள் முதலீடு செய்த பின்னர் அடுத்த மூன்று மாதங்களில் இரட்டிப்பு லாபத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும், கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் உடனடியாக அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் அனுகி இணைந்து கொள்ளலாம்.


SOURCE :Examsdaily.in

Next Story
கதிர் தொகுப்பு
Trending News