Kathir News
Begin typing your search above and press return to search.

இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் மத்திய அரசின் திட்டம் - பிரதமர் மோடி கூறியதன் பின்னணி என்ன?

இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஜன்சமர்த் திட்டம்.

இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் மத்திய அரசின் திட்டம் - பிரதமர் மோடி கூறியதன் பின்னணி என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Jun 2022 11:46 PM GMT

இளைஞர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதன் மத்திய அரசு முனைப்புடன் இருந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அறிமுகப் படுத்துகிறது. திட்டங்களையும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் சென்று அடைகிறதா? அவர்களுக்கு அதைப்பற்றி கருத்து இருக்கிறதா? என்று கேட்டால், அது மக்களுக்கு மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் சில பிரச்னைகளில் இருந்து வருகிறது. எனவே நவீன மயமாக்குதல் டிஜிட்டல் மயமாக்குதல் தொடங்கிய காலகட்டங்களில் இருந்த தற்போது மத்திய அரசும் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறது.


மேலும் அதிகரித்துக் கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மத்திய அரசின் தகவல்களும் தற்போது அந்தந்த மத்திய அரசின் வலைதளங்களின் மூலம் சில நொடிகளில் நம்முடைய வீட்டின் வாசலில் அனைத்து தகவலும் கிடைத்து விடுகிறது. இந்த வாரம் இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் தற்போது கனவுத் திட்டமாக இருந்து வருகிறது. அரசின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ சிறப்பு வாரம் (ஜூன் 6 முதல் ஜூன் 12 ) விழா தொடக்கத்தில் அந்த இணையத்தை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள், திட்டங்களின் பலனைப் பெறுவதற்கு மக்கள் அரசை நாடி வந்தனர். தற்போது இணையதளங்களில் தேடி அலையாமல் அவர்களுடைய வீட்டில் மக்களுடைய நிர்வாகத்தை மற்றும் தேவையான விஷயங்களைக் கொண்டு வருகிறோம் என்று கூறினார்.


கடன் வசதியுடன் கூடிய அரசு திட்டங்களுக்கான தேசிய இணையம் ஜன் சமர்த் இதன் ஒரு முக்கிய படியாகும். மேலும் இந்த இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் விவசாயிகள் வணிகர்கள் சிறு தொழில் முனைவோர்கள் ஆகியோரின் வாழ்க்கையின் மேம்படுத்துவதற்கான கனவுகளை நினைவாக்கும் வகையில் உதவிகள் செய்கிறது நம் நாட்டு இளைஞர்களின் கனவுகளை முக்கிய இடத்திற்கு எடுத்துச் செல்வதே இந்த இணையதளம் முக்கிய பங்கு வகிக்கிறது.

Input & Image courtesy:News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News