Kathir News
Begin typing your search above and press return to search.

ரிசர்வ் வங்கி முடிவு: இந்திய மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்யலாம்!

இந்திய மதிப்பில் ஏற்றுமதி செய்ய ரிசர்வ் வங்கி தற்போது அனுமதித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி முடிவு: இந்திய மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்யலாம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 July 2022 11:25 PM GMT

இறக்குமதி வர்த்தகத்தில் தற்போது இந்திய ரூபாயிலிருந்து வர்த்தகர்கள் மேற்கொள்ள முடியும் என்ற ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்தியாவின் ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த முடிவை வரவேற்ற சைமா தற்போது இதற்கு ஆதரவான வகையில் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இதுகறித்து தென்னிந்திய மில்கள் சங்கமாக சங்கத்தின் தலைவர் ரவி கூறுகையில், இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் என்ற ஒரு புதிய பார்வை ரிசர்வ் வங்கியின் வரவேற்ப்பை பல்வேறு வர்த்தகர்களும் மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக கூறினார்.


நம் நாட்டின் கணிசமான வர்த்தகம் மற்றும் அன்னிய செலவாணி பற்றாக்குறை போன்ற பல்வேறு நாடுகளுடன் நாம் வர்த்தகத்தை ஊக்குவிக்க இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றும், மேலும் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வர்த்தகர்கள் இனி இந்த முயற்சியில் பயன் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவின் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்கள் பயன்பெற முடியும் மேலும் அவர்கள் இந்து மதத்திலேயே அவற்றை இறக்குமதி செய்வதற்கு இந்த கொள்கை வழிவகுக்கிறது.


தற்போதைய முடிவுகள் மற்றும் இதனுடைய நடைமுறை அம்சங்கள் செய்முறை படுத்துவதற்கு சிறிது காலம் தேவை பட்டாலும் நீண்ட கால அடிப்படையில் ரூபாய் மூலம் சர்வதேச வர்த்தகம் மேற்கொள்வது என்பது பல்வேறு நாடுகளில் இந்திய ரூபாய் பழக்கத்தை ஊக்குவிக்கும் மேலும் சர்வதேச நாணயமாக இந்திய நாணயம் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் காரணமாக இந்தியில் பண பரிமாற்றத்தில் மற்ற நாடுகளுடன் இந்தியா சமூக உறவுகளைப் பேணுவதற்கு இது பயனுள்ள வகையில் அமையும்.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News