Kathir News
Begin typing your search above and press return to search.

பல ஆயிரம் பேர் முன்னிலையில் பக்காவா பொய் சொன்ன கனிமொழி! ஆதாரத்தோடு நைய கிழிக்கப்பட்ட தி.மு.க-வினரின் முகத்திரை!

பல ஆயிரம் பேர் முன்னிலையில் பக்காவா பொய் சொன்ன கனிமொழி! ஆதாரத்தோடு நைய கிழிக்கப்பட்ட தி.மு.க-வினரின் முகத்திரை!

MuruganandhamBy : Muruganandham

  |  25 April 2021 2:13 AM GMT

சென்னை தரமணி ஐஐடி வளாகத்தில் கனவு தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் பொருளாதார வளர்ச்சியில் "தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் கனவு"என்ற தலைப்பில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய எம்.பி கனிமொழி, திமுகவினருக்கே உரித்தான பாணியில் சந்தேகமே வராத அளவுக்கு ஒரு நிமிடத்தில் இரண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.


கடந்த மூன்று ஆண்டிகளில் 1000 துப்புரவுப் பணியாளர்கள் பணி செய்யும் போது இறந்து விட்டதாகக் கூறியுள்ளார். உண்மையில் 1993 முதல் 2020 வரை, கடந்த 27 ஆண்டுக் காலத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 920தான். அதற்கான ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



அடுத்து கடந்த மூன்று ஆண்டிகளில் துப்புரவுப் பணியாளர்களின் மேம்பாட்டுக்காக 174 கோடி ரூபாய் ஒதுக்கி அதைச் செலவு செய்யவில்லையாம். உண்மையில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்த ஒதுக்கீடு 221 கோடி ரூபாயாகும். அதில் 192 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இது போக துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கை மேம்படக் கடன் வழங்கும் திட்டமும் தனியாகச் சிறப்பாக இயங்கி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 1,111 கோடி கடனாக வழங்கப்பட்டது. இத்தனை ஆதாரம் கையில் இருக்கும் நிலையில், ஒரு பொய்யை உண்மை போல திரித்து கூறும் திறமை, திமுகவினரிடம் இயல்பாகவே இரத்தத்தில் ஊறியிருக்கிறது போல.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News