Kathir News
Begin typing your search above and press return to search.

கோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளி அதிகரிப்பு - இல்லாதது பொல்லாததை ஊதிப்பெரிதாக்கும் ஊடகங்கள்!

கோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளி அதிகரிப்பு - இல்லாதது பொல்லாததை ஊதிப்பெரிதாக்கும் ஊடகங்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  17 Jun 2021 1:37 AM GMT

கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரித்த முடிவு தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக ஒரு சில ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை தொடர்பான அறிவியல்பூர்வமான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை சம்மந்தமான அடிப்படை அறிவியல்பூர்வமான காரணங்களினால் கொவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 4-6 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கொவிட்-19 பணிக்குழு தலைவர் டாக்டர் என் கே அரோரா விளக்கமளித்தார்.‌

"ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறையின் நிர்வாக முகமை வெளியிட்ட தரவுகளின்படி, 12 வாரங்கள் இடைவெளி இருக்கும் போது தடுப்பூசியின் செயல்திறன் 65% - 88% வரை வேறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆல்ஃபா வகைத் தொற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது. 12 வாரங்கள் இடைவெளியை அவர்கள் பின்பற்றியதால் இங்கிலாந்தினால் மீள முடிந்தது.

இடைவெளி அதிகரிக்கும்போது அடினோவெக்டர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை அறிவியல் காரணங்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்று நாங்களும் கருதினோம்.

எனவே இந்த இடைவெளியை 12-16 வாரங்களாக உயர்த்த மே 13-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது". அனைவராலும் சரியாக 12 வாரங்களில் மீண்டும் வர இயலாததால், இதன் மூலம் நெகிழ்வுத்தன்மையும் அளிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

"கொவிஷீல்டு பற்றிய ஆரம்பக்கட்ட ஆய்வுகள் வெவ்வேறு முடிவுகளை வழங்கின. இங்கிலாந்து போன்ற நாடுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியபோது 12 வார இடைவெளியைப் பின்பற்றின.

எங்களுக்கு இந்தத் தரவு தெரிய வந்தபோது, இடைவெளி குறித்த முடிவை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதால் நமது சோதனை தரவுகளில் சிறந்த எதிர்ப்பு ஆற்றல் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் நான்கு வார இடைவெளியை நாங்கள் அறிவித்தோம்.

பின்னர் கூடுதல் அறிவியல் மற்றும் ஆய்வகத் தரவுகளை நாம் பெற்றபோது, இடைவெளி நான்கு வாரங்களாக இருக்கும்போது தடுப்பூசியின் செயல் திறன் சுமார் 57%ஆகவும், எட்டு வாரங்களாக இருக்கும்போது 60% ஆக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News