Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க'வின் தேர்தல் போலி வாக்குறுதிகளை அக்குவேர், ஆணிவேராக நாடாளுமன்ற அவையில் கிழித்து தொங்கவிட்ட நிர்மலா சீதாராமன்!

தி.மு.கவின் தேர்தல் போலி வாக்குறுதிகளை அக்குவேர், ஆணிவேராக நாடாளுமன்ற அவையில் கிழித்து தொங்கவிட்ட நிர்மலா சீதாராமன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2022 6:39 AM GMT

விலைவாசி உயர்வு தொடர்பாக லோக்சபாவில் விவாதம் நடந்தது. அப்போது வரி உயர்வுக்கு மத்திய அரசின் மீது பழி போட்டு திமுக தப்பிக்க பார்த்தது. தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசும் போது, பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே பேசும்போது நாட்டில் வெங்காயம் விலை குறைந்துவிட்டது. தக்காளி விலை குறைந்துவிட்டது என்றார். இந்த இரண்டையும் மட்டும் வைத்து கொண்டு ஒவ்வொரு குடும்பமும் மூன்று வேலையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா? என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

மத்திய அரசு மேல் இவ்வளவு கோபமாக ஜிஎஸ்டி போட்டுவிட்டதாக திமுக சொல்கிறது. பிராண்டட் பொருட்கள் மேல் தான் ஜிஎஸ்டி கவுன்சில் வரி போட்டுள்ளது. மத்திய அரசு போடவில்லை. மோடி போடவில்லை. உங்கள் அமைச்சர் அமர்ந்துள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் தான் அது நிர்ணயம் ஆனது. அதில் 5 சதவீதம் தான் பிராண்டட் பொருட்கள் மீது வரி போட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து நாளிதழில் செய்தி வந்துள்ளது.

ஒரு கிலோ தயிருக்கு பழைய விலை ரூ.100. அதற்கு 5 சதவீத வரி போட்ட பிறகு ரூ.105 க்கு விற்க வேண்டும். ஆனால், நீங்கள் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள். 5 சதவீத வரி போட சொன்னால், நீங்கள் எவ்வளவு போடுகிறீர்கள்.

லஸ்சியை பழைய விலைப்படி ரூ.27 க்கு விற்க வேண்டும். 5 சதவீத வரி போட்ட பிறகு ரூ.28.35க்கு விற்க வேண்டும். ஆனால், நீங்கள் ரூ.30க்கு விற்பனை செய்கிறீர்கள். ஜிஎஸ்டி மீது பழி போட்டுவிட்டு நீங்கள் அதிக விலைக்கு விற்று பாரத்தை மக்கள் மீது சுமத்துகிறீர்கள்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் உங்கள் அமைச்சரும் அமர்ந்துள்ளார். ஏக மனதாக அனைவரும் சேர்ந்து ஒரு மித்தமாக எடுத்த முடிவு. புதிதாக ஏழைகளுக்கு கஷ்டம் கொடுக்க எதுவும் இல்லை.

தமிழகத்திற்கு ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவை தொகை தான் பாக்கி உள்ளது. அதுவும் ரூ.2,493 கோடி தான். அதை விட ஜாஸ்தி இல்லை. எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் என்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News