Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்வோம் என அண்ணாமலை கூறினாரா?

கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்வோம் என அண்ணாமலை கூறினாரா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Sep 2023 1:08 AM GMT

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கோவில்களில் ஆடு,கோழி பலியிடும் முறையை தடை செய்வோம். ஆடு,கோழி பலியிடும் முறை சனாதனத்தில் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதாக ஒரு தகவல் பரவி வருகிறது.


பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், இவ்வாறு எந்த செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

இதுகுறித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா என்பதை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தேடினோம். அதில் இது குறித்து எந்த பதிவுகளும் இடம்பெறவில்லை. இதன் மூலம் போலியான செய்தியை எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளர் என்பது தெரிய வந்தது.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் போது கோவில்களில் ஆடு, கோழி பலியிடும் முறையை தடை செய்வோம் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவி வரும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News