Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க வை இழிவுபடுத்த முயன்று போலி செய்தி பரப்பிப் பிடிபட்ட காங்கிரஸ்!

பா.ஜ.க வை இழிவுபடுத்த முயன்று போலி செய்தி பரப்பிப் பிடிபட்ட காங்கிரஸ்!

JananiBy : Janani

  |  7 March 2021 1:14 PM GMT

அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் போட்டியிட்டு போலி செய்திகளைப் பரப்பி வருகின்றனர் மற்றும் மாநிலத்தில் தற்போதைய பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிரான தவறான கருத்துக்களை உருவாக்கவும் போலி செய்திகளைப் பரப்பி வருகின்றது. தற்போது மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் அக்குற்றச்சாட்டில் பிடிபட்டுள்ளது.




மார்ச் 4 இல் அசாமில் காங்கிரஸ் அரசாங்கம் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்று ஒரு வீடியோவை பகிர்ந்தது. அந்த ட்விட்டில், "வாக்காளர் மக்களே தற்போது அசாமில் 2021 தேர்தல் நடைபெறவுள்ளது. நீங்கள் வாக்களிக்கும் முன்பு கீழே உள்ள வீடீயோவை பாருங்கள்," என்று குறிப்பிட்டிருந்தது. அதே நேரத்தில் அந்த வீடியோவில் CAA போராட்டத்தின் போது ஐந்து இளைஞர்கள் தியாகம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ மூலம் தற்போதைய மத்திய அரசாங்கம் கருத்து வேறுபாடுகளில் மற்றும் அதன் குரல்களைத் தடுப்பதில் உறுதியாக உள்ளது என்னும் கருத்தைக் காங்கிரஸ் அரசாங்கம் திணிக்க முயன்றுள்ளது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அசாம் காங்கிரஸ் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் தூண்டுவதற்கு 2017 இல் நடந்த வீடீயோவை 2019 இல் நடந்த CAA போராட்டத்துடன் பயன்படுத்தி போலியாகப் பரப்பியுள்ளது.

இந்த பொய்யானது அதே நேரத்தில் பா.ஜ.க தலைவரும் மற்றும் மூத்த அசாம் அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் காங்கிரஸைப் போலி செய்தி தொகுப்பு என்று ட்விட்டரில் குறிப்பிட்டு, "இரண்டு நிமிடம் இதை பாருங்கள், ஜார்கண்ட் வீடியோவைஅஸ்ஸாமிற்கு பயன்படுத்தியுள்ளது," என்று கூறியிருந்தார்.



மோடி அரசாங்கத்தை இழிவுபடுத்த எண்ணிய காங்கிரஸ் இதுகுறித்து ஆராய மறந்துவிட்டது, முன்னரே டைம்ஸ் நொவ் உள்ளிட்ட ஊடகங்கள் சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுடன் வீடியோ வலம் வந்தபோது ஊடகங்கள் உண்மையைக் கண்டறிந்தது என்பது தெரியவில்லை.




உண்மையில் இதுகுறித்த வீடியோவை PIB 2019 இல் சரிபார்த்தது. உண்மையில் ஆச்சரியமளிக்கும் விதமாக, 2019 இல் இந்த வீடியோ சரிபார்க்கப்பட்டாலும் மீண்டும் அதைக் காங்கிரஸ் போலி குற்றச்சாட்டுகளுடன் வெட்கமின்றி பகிர்ந்துள்ளது. தற்போது CAA போராட்டத்தில் அசாம் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டிய வீடியோ உண்மையில் 2017 நவம்பரில் ஜார்கண்ட் காவல்துறை நடத்திய பயிற்சி வீடியோவாகும்.



இதே வீடியோ காஷ்மீரில் பகிரப்பட்டது. இதுபோன்று காங்கிரஸ் போலி குற்றச்சாட்டு வைப்பது இது முதன்முறை அல்ல. பல முறை பிடிபட்டாலும் பா.ஜ.கவை இழிவுபடுத்தத் தொடர்ந்து போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. கடந்த ஆண்டு கூட இதுபோன்ற வீடியோ ஒன்றைப் பகிர்ந்து மாட்டிக்கொண்டது, கொரோனா தொற்றுநோய் காலத்தில் பா.ஜ.க வை விட அதிகமாக ஏழை மக்களுக்கு உதவியதாக வீடியோ ஒன்றைப் பகிர்ந்தது. உண்மையில் அது ஆகஸ்ட் 2019 இல் எடுக்கப்பட்ட என்பது கண்டறியப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News