Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து வதந்தி பரப்பும் விடுதலை சிறுத்தை கட்சி ஆதரவு அரசு பள்ளி ஆசிரியை! துறை ரீதியிலான நடவடிக்கை பாயுமா?

தொடர்ந்து வதந்தி பரப்பும் விடுதலை சிறுத்தை கட்சி ஆதரவு அரசு பள்ளி ஆசிரியை! துறை ரீதியிலான நடவடிக்கை பாயுமா?

MuruganandhamBy : Muruganandham

  |  31 March 2021 10:20 AM GMT

சமூக வலைதளங்களில் பகிரப்படும் முக்கல்வாசி தகவல்கள் உறுதிபடுத்தப்படாதவையாகவும், உண்மை தன்மை குறித்து ஆராயப்படாமல் பகிரப்பட்டு வருகின்றன. சமூக வலைதளம் குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள் வதந்திகளை பரப்புவதை ஒரு விதமாக எடுத்துக்கொண்டாலும், நன்கு படித்து அரசு பணியில் உள்ள சிலரும் வதந்திகளை பரப்பி வருவது, அவர்கள் எடுத்துள்ள நிலைப்பட்டை உணர்த்துகிறது.

சமூக வலைதளங்களில் பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மகாலட்சுமி என்ற அரசுப்பள்ளி ஆசிரியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு நிலைபாட்டை கையில் எடுத்து அவர்களுக்கு சாதகமான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஆளும் கட்சியை விமர்சித்து பதிவிட்டு வந்த அவர், தற்போது சமூக வலைதளங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக பரவி வரும் வதந்திகளை பதிவிட்டு, எதிர்மறை கருத்துகளை பரப்பி வருகிறார்.

ஏற்கனவே இது குறித்து எங்கள் கதிர் நியூஸ் குழு செய்தி வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றப்படுவதாக, பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக கூறி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பதவிட்ட ஆசிரியை, செய்தி வெளியானதை அறிந்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் போட்டோஷாப் செய்யப்பட்ட வதந்தி தகவல் கொண்ட போஸ்டரை பகிர்ந்து, யாருக்கும் ஆதரவாக நான் பதிவிடவில்லை என தன்னிலை விளக்கம் வேறு கொடுத்துள்ளார். அவர் பதிவிட்ட போஸ்டரும், உண்மையான போஸ்டரையும் அடுத்து பார்க்கலாம்.

அதிகாரப்பூர்வ பாஜக முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட போஸ்டர்:



ஆசிரியை மகாலட்சுமி பகிர்ந்த வதந்தி தகவல் அடங்கிய போஸ்டர்:




Next Story
கதிர் தொகுப்பு
Trending News