Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையை கலவரமாக்க துடிக்கும் "மர்ம" நபர்கள்! கடைகளை மூட சொன்னதாக பொய் பிரச்சாரம் - ஒத்து ஊதும் தி.மு.க சார்பு ஊடகங்கள்!

கோவையை கலவரமாக்க துடிக்கும் மர்ம நபர்கள்! கடைகளை மூட சொன்னதாக பொய் பிரச்சாரம் - ஒத்து ஊதும் தி.மு.க சார்பு ஊடகங்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  1 April 2021 9:33 AM GMT

கோவையில் உத்தரபிரதேச முதல்வர் வாக்கு சேகரிப்பிற்கு வந்த பொழுது கடைகளை மூடச் சொல்லி பாஜக தொண்டர்கள் RSS காவிகள் அராஜகம், வன்முறை என செய்திகளை பரவ விட்டிருக்கிறது. கோவையை கலவரமாக்க துடிக்கும் சில பிரிவினைவாதிகளால் தான் உத்திரபிரதேச முதல்வர் யோகி வந்த நேரத்தில், சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்துள்ளது.

சில ஊடகங்கள் கடைகளை மூட சொன்னதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். விமான நிலையம் முதல் லட்சுமி மில் புலியகுளம் வழியாக ராமநாதபுரம், சுங்கம், GH, ராஜவீதி அனைத்து கடைகளும் திறந்து தான் இருந்தது எங்கும் கடைகளை மூட சொல்லவில்லை அமைதியான முறையில் சென்ற பிரச்சார ஊர்வலத்தில் 10பேர் வழிமறைத்து "அல்லாஹ் அக்பர்" என்று கோசம் எழுப்பி வம்பிழுகின்றனர். அந்த வீடியோவை அடுத்து பார்க்கலாம்.


உண்மையில் உ.பி முதல்வர் போன பிறகும் வாகன பேரணி நடந்திருக்கிறது.அப்போது டவுன்ஹால் பகுதியில் ஒரு சிலர் அல்லாஹ் அக்பர் என கோஷம் போட்டிருக்கின்றனர்.பதிலுக்கு இவர்களும் ஜெய் sri ராம் சொல்லி இருக்கின்றனர்.முடிவில் பாகிஸ்தான் நாட்டை இதில் கோர்த்து இருக்கின்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு சண்டை மூண்டிருக்கிறது.போலீசார் சமாதானப்படுத்தி அருகில் உள்ள கடைக்குள் அழைத்து சென்றிருக்கின்றனர்.விசயம் கேள்விபட்ட பிறகு கூட்டம் கட்டுக்கடங்காமல் அங்கு கூட மேலும் பிரச்சினை ஆகாமல் போலீசார் தலையிட்டு தடுத்து விட்டனர். அதற்குள் மீடியாக்கள் எதை சொன்னால் வெறுப்பாகுமோ அதை மட்டும் சொல்லி வெறுப்பரசியலை தூண்டி விட்டிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News