Kathir News
Begin typing your search above and press return to search.

வடமாநிலத்தில் பேட்டரி ஸ்கூட்டி வெடித்ததாக செய்தி பரவி வரும் தமிழக கோர விபத்து!

வடமாநிலத்தில் பேட்டரி ஸ்கூட்டி வெடித்ததாக செய்தி பரவி வரும் தமிழக கோர விபத்து!

MuruganandhamBy : Muruganandham

  |  13 Nov 2021 3:50 AM GMT

தீபாவளி பண்டிகையின் போது, புதுச்சேரி அருகே நாட்டு பட்டாசுகளை மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த போது வெடித்து சிதறியதில் தந்தை, மகன் 2 பேரும் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இவர்களது உடல் பாகங்கள் சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு சிதறி அங்குள்ள கட்டிடங்கள், வீடுகளின் மீது கிடந்தன. அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் துண்டு துண்டாக சிதறி கிடந்தது.

இந்த சம்பவத்தின்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் மற்றும் அருகில் நிறுத்தியிருந்த லாரி, கார் மற்றும் வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தை பார்த்தபோது ஏதோ சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததுபோல் இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோவை பார்க்கும் போதே, அதன் கோர நிலை தெரியும். இந்த நிலையில், தமிழகத்தில் நாட்டு பட்டாசால் நடந்த விபத்தை, வடஇந்தியாவில் பேட்டரி ஸ்கூட்டி வெடித்ததாக பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு சில ஆன்லைன் ஊடகங்களும் அதனை உண்மை என்று நம்பி செய்தியாக பதிவிட்டுள்ளன. இது குறித்த தகவலை அடுத்து வரும் ஸ்கிரீன் ஷாட்டில் பார்க்கலாம்.



இந்த வீடியோ உண்மையில், புதுச்சேரி - தமிழக எல்லையில் நடந்த, ஸ்கூட்டியில் நாட்டு பட்டாசு வெடித்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காட்சியாகும். இது பேட்டரி ஸ்கூட்டி வெடித்த விபத்து இல்லை என்பது உறுதியாகிவிட்டது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News