Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை கோவை நேரு கல்லூரி மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் வதந்தி!

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை கோவை நேரு கல்லூரி  மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் வதந்தி!

MuruganandhamBy : Muruganandham

  |  13 Dec 2021 2:10 PM GMT

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

நீலகிரி மற்றும் கோவையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இடம்பெறும் மூன்று நிமிட வீடியோவை அந்த சேனல் வெளியிட்டது. அந்த வீடியோவில் மாணவர்கள் ஜெனரல் ராவத்தின் மரணத்தைக் கொண்டாடுவதாகக் குற்றம் சாட்டியது. இந்த வீடியோ வைரலானதையடுத்து போலீசார் கல்லூரியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.





உண்மை சரிபார்ப்பு :

இது குறித்து கோவை நேரு கல்லூரி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கோவை நேரு கல்வி குழுமத்தின் கல்லூரியில், முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்காக கல்லூரி விடுதியில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவையே பிபின் ராவத் மரணத்துடன் தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இந்த நிகழ்வானது பிபின் ராவத் விபத்து நிகழ்வுக்கு முன்பே நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.









Next Story
கதிர் தொகுப்பு
Trending News