அரசியலுக்கக்காக இப்படிக்கூட செய்ய முடியுமா? ஆட்களை வைத்து போலி ஆய்வறிக்கை வெளியிடும் ராகுல் காந்தி!
By : Kathir Webdesk
இந்திய தேசிய காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 5 ஆண்டுகளில் 21% இலிருந்து 42% ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தகவலை ராகுல் காந்தி ஜூலை 15அன்று டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இவர்கள் ஆதாரமாக குறிப்பிட்ட CMIE இந்தியாவில் வேலையின்மை விகிதத்தை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது , ஆனால் 2022க்கான இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் காணவில்லை.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் (15–24 வயது) குறித்த உலக வங்கியின் தரவு அறிக்கை :
இது இந்திய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 22.9% என்பதைக் காட்டுகிறது.
காங்கிரஸ், ராகுல் காந்தி மற்றும் சிஎம்ஐஇ அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பகிரப்பட்ட புள்ளிவிவரங்களை உலக வங்கியின் அதிகாரப்பூர்வ தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன. இதுவரை நடந்த தேடலில், ஆய்வு அறிக்கை வெளியிட்டதே காங்கிரஸ் பொது அறிக்கையின் வரைவு உறுப்பினர்களில் ஒருவர் தான். காங்கிரஸ் அரசியல் நடத்த சாதகமாக கருத்து கணிப்பை வெளியிட்டு, அதனை ஊடகங்கள் செய்தியாக்க நிரபந்திக்கபட்டுள்ளது தெரிய வருகிறது.