#FactCheck தமிழக முதல்வரை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரம் ஒதுக்கவில்லையா? உண்மை என்ன?
#FactCheck தமிழக முதல்வரை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரம் ஒதுக்கவில்லையா? உண்மை என்ன?

By : Kathir Webdesk
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவர், "மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்திக்க தமிழக முதல்வர் அவர்கள் கால அவகாசம் கோரி இருந்ததாகவும், ஆனால் அதற்கு மத்திய அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
"மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க தமிழக முதல்வர் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது ஆனால் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் செல்வதால் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் தெரிவித்து விட்டதாக தகவல். என்னவா இருக்கும்??" என்று அந்த 'நடுநிலை' பத்திரிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சரின் அலுவலகம், "மாண்புமிகு தமிழக முதல்வர் சார்பில் நிதி அமைச்சரை சந்திக்க கால அவகாசம் கேட்டு எந்த கோரிக்கையும் இந்த அலுவலகத்தில் வைக்கப்படவில்லை. தவறான செய்தி", என்று விளக்கம் அளித்துள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் சார்பில் நிதி அமைச்சரை சந்திக்க கால அவகாசம் கேட்டு எந்த கோரிக்கையும் இந்த அலுவலகத்தில் வைக்கப்படவில்லை. தவரான செய்தி.@pibchennai https://t.co/LQ9dN9SZdj
— NSitharamanOffice (@nsitharamanoffc) January 19, 2021
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து போலி செய்தியை தமிழக ஊடகங்கள் வெளியிடுவது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டு, "நீட் தேர்வால் தான் மாணவர்கள் இறந்தார்களா?" என்று மத்திய அமைச்சர் கூறியதாக போலி செய்தி பரப்பப்பட்டது. அப்போதும் அந்த போலி செய்தியை சுட்டிக்காட்டினார் மத்திய அமைச்சர்.
#FakeNewsAlert pic.twitter.com/vIGDT6DR1F
— Nirmala Sitharaman (@nsitharaman) June 8, 2018
கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கடன் தள்ளுபடி விவகாரத்தில் போலி செய்தியை வெளியிட்டு பிறகு பகிரங்க மன்னிப்பு கேட்டது ஒரு செய்தி வலைத்தளம்.
கடன் தள்ளுபடி விவகாரத்தில் போலி செய்தி வெளியிட்டதற்கு பகிரங்க வருத்தம் தெரிவித்த ஒன் இந்தியா தமிழ்! #OneIndiaTamil #FakeNews #WriteOff @nsitharaman https://t.co/SyqGeOIVd4
— Kathir News (@KathirNews) May 3, 2020
ஊடகவியலாளர்களும் இது போல போலி செய்தியை பரப்புவது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், "பிஹாரில் 263 கோடி ரூபாய் செலவில் 8 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் ஒன்று திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுந்திருக்கிறது", என்று ஊடகவியலாளர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை போலி செய்தி என்று சுட்டிக்காட்டிய பிறகும் அந்த போலி செய்தியை இன்னமும் நீக்காமல் வைத்திருக்கிறார் அந்த ஊடகவியலாளர்.
#FactCheck போலி செய்திகளை பரப்பும் நியூஸ் 7 ஊடகவியலாளர் தேவேந்திரன்! #FakeNews @devpromoth @news7tamil https://t.co/UmoADxCHXo
— Kathir News (@KathirNews) July 17, 2020
